Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
சிறப்பு செய்திகள்

சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு

Share:

ஈப்போ, அக்டோபர்.09-

பேரா, சுங்கை சட்டமன்ற உறுப்பினரும், பேரா மாநில சுகாதாரம், மனித வளம், ஒற்றுமை மற்றும் இந்திய நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, வரும் அக்டோபர் 11 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பீடோர், டேவான் முஹிபா மண்டபத்தில் வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு, சுங்கை, பீடோர், தாப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிலப்பட்டா வழங்குதல், பள்ளிகள், ஆலயங்கள், பொது அமைப்புகளுக்கு மானியம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகளுடன் பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவர் படைப்புகள் என பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கத்தின் தீபாவளி பொது திறந்த இல்ல உபசரிப்பு, வண்ணக் கலவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விருந்து நிகழ்ச்சியில், பொதுமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!