Jun 25, 2026
Thisaigal NewsYouTube
அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு
சிறப்பு செய்திகள்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.13-

தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் ஆதரவுடன் இலக்கவியல் அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பொது உபசரிப்பு, வரும் அக்டோபர் 18 ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர், கேஎல் சென்ரல், லோட் எஃப் தளத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவிருக்கிறது.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.

பல்வேறு இனம், சமயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அமைச்சின் பணியாளர்கள், தொழில்துறை சார்ந்த சமுதாயத்தினர் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், இந்த தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலக்கவில் அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சஹாயா மடானி, சீனார் பெர்பாடுவான்” என்ற கருப்பொருளுடன், இந்த தீபாவளி பொது உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அடையாளம் மட்டும் அல்ல, மடானி மலேசியாவின் கட்டமைப்பிற்குள் மலேசியர்களின் ஞானம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையையும் குறிக்கிறது என்று இலக்கவியல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!