Jun 25, 2026
Thisaigal NewsYouTube
தந்தை பெரியாரின் 147 ஆவது அகவை நன்நாள் விழா
சிறப்பு செய்திகள்

தந்தை பெரியாரின் 147 ஆவது அகவை நன்நாள் விழா

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.12-

மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 147 ஆவது அகவை நன்நாள் விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 19 இல் உள்ள டேவான் செக்‌ஷன் 19 பொது மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

இயக்கத்தின் துணைத் தலைவர் த. பரமசிவம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முன்னாள் துணை அமைச்சர் டான் ஶ்ரீ க. குமரன், தொடக்கவுரை நிகழ்த்தி, விருதளிப்பு நிகழ்வுக்கு தலைமையேற்பார்.

மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் பெரு. அ. தமிழ்மணி, தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து, பேருரை நிகழ்த்துவார்.

இந்நிகழ்வில் த.பரமசிவம் மற்றும் கொள்கைக் கனல் கெ.வாசு ஆகியோர் தன்மானப் பெருஞ்சுடர் எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்படவிருக்கின்றனர்.

மதிக தேசியத் தலைவர் சா. பாரதி, மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு ஆகியோர் சிறப்புரை வழங்குவர்.

பிரபல பாடகர் எம்.எஸ். பிரிட்டோவின் படைப்பையும் கண்டு களிக்க, இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளும்படி இயக்கப் பொதுச் செயலாளர் சி.மு. விந்தை குமரன் கேட்டுக் கொள்கிறார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!