Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சூரியா கே.எல்.சி.சி குழுமத்தின் “லோட்டஸ் ஒஃப் லைட்” தீபாவளிக் கொண்டாட்டம்
சிறப்பு செய்திகள்

சூரியா கே.எல்.சி.சி குழுமத்தின் “லோட்டஸ் ஒஃப் லைட்” தீபாவளிக் கொண்டாட்டம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.11-

சூரியா கே.எல்.சி.சி குழுமம், இவ்வாண்டின் தீபாவளிப் பண்டிகையை ஒளியின் சிறப்புடன் வண்ணமயமாக மாற்றியுள்ளது.

“லோட்டஸ் ஒஃப் லைட்” எனும் கருப்பொருளின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி முதல் வரும் 22-ஆம் தேதி வரை, சூரியா கே.எல்.சி.சி, அலமாண்டா ஷாப்பிங் செண்டர், மற்றும் மெஸ்ரா மால் ஆகிய இடங்களில் தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன.

தூய்மை, புத்துணர்ச்சி மற்றும் மறுபிறப்பின் சின்னமாக விளங்கும் தாமரை மலரின் கருப்பொருளை மையமாகக் கொண்டு இப்பண்டிகை அலங்காரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தாமரை மலர் மக்களை ஒன்றிணைக்கும் ஒளி மற்றும் நம்பிக்கையின் அடையாளம் என்று சூரியா கே.எல்.சி.சி தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் டான் கூறியுள்ளார்.

அதே வேளையில், சூரியா கே.எல்.சி.சியின் சென்டர் கோர்ட்டில் தாமரை மலரைப் பிரதிபலிக்கும் பிரமாண்ட ஒளி அலங்காரம், பாரம்பரிய கோலம் வடிவங்கள், மற்றும் பாரம்பரிய பாரதநாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி தினத்தில் ஹென்னா பயிற்சி வகுப்பும் நடத்தப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் 1,000 ரிங்கிட் செலவில் 50 ரிங்கிட் ஷாப்பிங் இ-வவுச்சர் அல்லது 1,000 ரிங்கிட் மதிப்பில் இ-வவுச்சர் வாங்கினால் கூடுதலாக 100 ரிங்கிட் இ-வவுச்சர் பெறலாம்.

புத்ராஜெயாவிலுள்ள அலம்மண்டா ஷாப்பிங் செண்டரும் மற்றும் திரங்கானுவில் உள்ள மெஸ்ரா மாலும் இதே கருப்பொருளில் தங்கள் விழாக்களைக் கொண்டாடுகின்றன. இந்த ஒருங்கிணைந்த விழா, மலேசியாவின் பண்பாட்டையும், ஒற்றுமையின் உணர்வையும் பிரதிபலிக்கிறது.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!