Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பையும், திட்டமிடலின் முக்கியத்துவத்தையும் கரூர் விபத்து நினைவூட்டுகிறது – பாப்பா ராய்டு வருத்தம்
சிறப்பு செய்திகள்

பாதுகாப்பையும், திட்டமிடலின் முக்கியத்துவத்தையும் கரூர் விபத்து நினைவூட்டுகிறது – பாப்பா ராய்டு வருத்தம்

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.29-

கடந்த சனிக்கிழமை, தமிழ்நாடு, கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பந்திங் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமாகிய பாப்பா ராய்டு வீரமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“டிவிகே அரசியல் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் போது நடந்த துயர சம்பவத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துயரச் சம்பவம் 40-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளது. இது நம் அனைவரையும் வருத்தத்திற்குள்ளாக்கும் ஒரு பேரிழப்பு ஆகும்.

“இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு எந்த இடமாக இருந்தாலும், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் பாதுகாப்பையும் சரியான திட்டமிடலையும் உறுதிச் செய்வதன் முக்கியத்துவத்தை இச்சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.

“இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தலைவர்களும் காவல்துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து சரியான முறையில் வழிநடத்துவார்கள் என்று நான் மனதார நம்புகிறேன்.

“மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும், இந்தக் கடினமான நேரத்தில் அவர்களின் அன்புக்குரியவர்கள் வலிமை பெறட்டும்” என்று பாப்பா ராய்டு தெரிவித்துள்ளார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!