Apr 27, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ மாநகரில் நபிகள் நாயகம் பிறந்த தின ஊர்வலம் கோலாகலமாகக் கொண்டாட்டம்
சிறப்பு செய்திகள்

ஈப்போ மாநகரில் நபிகள் நாயகம் பிறந்த தின ஊர்வலம் கோலாகலமாகக் கொண்டாட்டம்

Share:

ஈப்போ, செப்டம்பர்.05-

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மீலாது நபி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி "ஒற்றுமை ஊர்வலம்" இன்று நடைபெற்றது.

நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி நபி பிறந்த இந்த ரபி உல் அவ்வல் ( Rabiul awal ) மாதம், பிறை ஒன்றில் இருந்து 13 வரையிலும் ஒவ்வொரு நாளும் இரவு, நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாற்றுச் சிறப்புகளை இப்பள்ளி வாசலில் தொடராகப் பேசப்பட்டது.

அதன் இறுதியாக இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் பேராக் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் பெண்கள், இளைஞர்கள், சிறார்கள் என கிட்டத்தட்ட 700 பேர் நபியின் நேசத்தை வெளிப்படுத்தினர்.

உலக மக்கள் எல்லோருக்காவும் நலம் வேண்டி சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது என்று ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பான முறையில் ஊர்வலம் நடைபெற்றது. அடுத்தாண்டு மேலும் சிறப்புடன் நடத்தப்படும் என்று ஷேக் முஜிபுர் ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு