Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

மலேசியா, பினாங்கில் 17வது எடிசன் தமிழ்த் திரை விருதுகள்

Share:

பினாங்கு, ஜன.25-

உலகத் தமிழர்களால் இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாக்குகள் பெற்று விருது வழங்கும் 17வது எடிசன் தமிழ் திரை விருதளிப்பு விழா வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் பினாங்கு SPICE ARENA அரங்கில், பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ பரிந்துரையின் பெயரில் பினாங்கு மாநில அரசு அனுசரணையுடன் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள பண்பலை வானொலி, தினசரி நாளிதழ், தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் மூலம் வாக்குகளை பெற்று தேர்வு செய்யப்படுகின்றவர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வின் தேர்வு பட்டியலில் 33 வரிசையில் தேர்ந்தெடுக்கப்படும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் பின்னணி பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், நடன இயக்குனர்கள் என பல வரிசையில் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு பட்டியலில் இடம்பெற 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை திரையரங்கம் மற்றும் OTT தளங்களில் வெளியீடு கண்ட திரைப்படங்கள் தேர்வு பட்டியலில் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் விருது மற்றும் கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்வு, இந்திய கலைஞர்களுடன், மலேசிய கலைஞர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை படைக்க உள்ளனர் என்று எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். மேல் விபரங்களுக்கு +60166167708 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!