Jun 25, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் ஒற்றுமைக்கு விளையாட்டு ஒரு தளமாக அமைகிறது
சிறப்பு செய்திகள்

மக்களின் ஒற்றுமைக்கு விளையாட்டு ஒரு தளமாக அமைகிறது

Share:


புத்ரா ஜெயா அக் 14


மக்களின் ஒற்றுமைக்கு விளையாட்டு ஒரு தளமாக அமைவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மதம், இனம் மற்றும் சமய பாகுபாடின்றி விளையாட்டு கலாச்சாரம் மக்களை ஒன்றிணைப்பதாக தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் விளையாட்டு தின நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.


மக்களிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதில் விளையாட்டு முக்கிய பங்காற்றி வருகிறது.
ஆகையால் மக்களிடையே விளையாட்டு கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதன் காரணமாக தான் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் தேசிய விளையாட்டு தினம் நடத்தப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் மலேசிய மடானி ஒற்றுமை திட்டத்தின் கீழ் விளையாட்டு ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுவதாக அவர் சொன்னார்.


மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை பேண விளையாட்டு மிக முக்கியமான ஒன்று என அவர் சொன்னார்.கடந்த 2011-ல் 44.5 விழுக்காடாக இருந்த மக்களில் உடல் பருமன் அளவு 2023-ல் 54.4 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலை கண்காணிக்கப்படாவிட்டால், நிலைமை மோசமடையும் என அவர் சொன்னார்.இந்த நிலையில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தமது முழு ஆதரவு உண்டு என்றார் அவர்.
இந்த அமைச்சை சேர்ந்த அனைவரும் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கு பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!