கோலாலம்பூர், ஜூலை.19-
நாட்டின் பொருளாதார இலக்கை வலுப்படுத்தும் முயற்சியில் கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமானத் தளமான தேசிய பொருளாதார மன்றம் (NEF) 2025 கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது. அதில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
பல்வேறு கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க முதலீடுகள் மூலம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை (TVET) ஆக்ககரப்படுத்த கெசுமாவின் உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார். SKM நிலை 6–8 ஐ பட்டப்படிப்புக்கு சமமானதாக அங்கீகரிக்க சட்டம் 652 இல் திருத்தம் செய்வது முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களின் வேலை வாய்ப்பு, முதலாளிகளுக்கான ஊக்கத் தொகைகள் மற்றும் TVET பட்டதாரிகளுக்கு தெளிவான தொழில் பாதைகள் உள்ளிட்ட வேலை சந்தையின் உண்மையான தேவைகளுக்கு இணையாக திறன் பயிற்சியை வழங்க தொழில்துறையுடன் கேந்திர ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அனைவருக்கும் மிகவும் நியாயமான மற்றும் சமமான பொருளாதாரம் என்ற மடானியின் விருப்பங்களுக்கு இணங்க, ஒவ்வொரு தனிநபருக்கும் தரமான திறன் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதில் கெசுமா உறுதி பூண்டுள்ளதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு


