கோலாலம்பூர், ஜூலை.19-
நாட்டின் பொருளாதார இலக்கை வலுப்படுத்தும் முயற்சியில் கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமானத் தளமான தேசிய பொருளாதார மன்றம் (NEF) 2025 கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது. அதில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
பல்வேறு கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க முதலீடுகள் மூலம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை (TVET) ஆக்ககரப்படுத்த கெசுமாவின் உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார். SKM நிலை 6–8 ஐ பட்டப்படிப்புக்கு சமமானதாக அங்கீகரிக்க சட்டம் 652 இல் திருத்தம் செய்வது முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களின் வேலை வாய்ப்பு, முதலாளிகளுக்கான ஊக்கத் தொகைகள் மற்றும் TVET பட்டதாரிகளுக்கு தெளிவான தொழில் பாதைகள் உள்ளிட்ட வேலை சந்தையின் உண்மையான தேவைகளுக்கு இணையாக திறன் பயிற்சியை வழங்க தொழில்துறையுடன் கேந்திர ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அனைவருக்கும் மிகவும் நியாயமான மற்றும் சமமான பொருளாதாரம் என்ற மடானியின் விருப்பங்களுக்கு இணங்க, ஒவ்வொரு தனிநபருக்கும் தரமான திறன் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதில் கெசுமா உறுதி பூண்டுள்ளதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

Related News

அனைத்துலக புத்தகக் கண்காட்சி: சிலாங்கூர் சுல்தான் தொடக்கி வைத்தார்

பேரா மாநிலத்தில் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட நிலப்பட்டா பிரச்னைக்கு தீர்வு

இளம் எழுத்தாளர் கிரிஷ் ஹரன் நாயருக்கு சிறப்பு விருது

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைத்துவப் பயிற்சி

கின்னஸ் கிளப்ஹவுஸை அறிமுகப்படுத்துகிறது கின்னஸ்: இப்போது இலவச முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன


