Oct 19, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி
சிறப்பு செய்திகள்

கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி

Share:

கோலாலம்பூர், மே.20-

மலேசியக் கல்வி அமைச்சு, தேசிய புத்தகக் கழகம் வழியாக, ஆறு மலேசியப் புத்தகத் தொழில் சங்கங்களுடன் இணைந்து கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சியை எதிர்வரும் 23 மே முதல் 1 ஜூன் வரை ஏற்பாடு செய்கிறது. 42 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் நாட்டின் முன்னணி புத்தக நிறுவனங்களில் ஒன்றான ஜெயபக்தியும் கலந்து கொள்கிறது எனத் தெரிவித்தார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ.

ஆண்டுதோறும் 1.5 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சியானது, புத்தகப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமானப் புத்தகங்களை வாங்கவும், பல்வேறு அங்கங்களில் பங்கேற்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக விளங்குகிறது.

தங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரமான, நாலும் தெரிய, நாளும் வாசிப்போம் என்பதற்கு ஒப்ப, எல்லாத் தரப்பு மக்களும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிந்து பயன் பெற வேண்டும் என்று டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ அழைப்பு விடுத்தார்.

Related News

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு