Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மடானி தலைமைத்துவத்தின் உகுவா மக்கள் மற்றும் அரசாங்க உறவுகளைப் பலப்படுத்துகிறது
சிறப்பு செய்திகள்

மடானி தலைமைத்துவத்தின் உகுவா மக்கள் மற்றும் அரசாங்க உறவுகளைப் பலப்படுத்துகிறது

Share:

போர்ட்டிக்சன், ஜூலை.21-


மடானி அரசாங்க பேக்பெஞ்சர்ஸ் உறுப்பினர்கள் சங்கம் (பிபிசி) ஏற்பாடு செய்த “மடானி அரசாங்கத் தலைமைத்துவ உகுவா” நிகழ்ச்சி, மாநிலத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் தீவிர ஈடுபாட்டுடன் போர்ட்டிக்சன் சுற்று வட்டாரத்தில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.


அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் வருகை சிறப்பாக அமைந்தது. மேலும் மனிதவள ஸ்டீவன் சிம், மனிதவள துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் ஆகியோரும் அதில் கலந்து கொண்டனர்.


திட்டத்தின் முக்கிய அம்சங்கள், புசாஸ்டா மசூதி, டெலோக் பெலாண்டோக் கிராமம் மற்றும் பச்சிடன் கிராமத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுு, மலிவு விலையில் அடிப்படை பொருட்களை வழங்கும் ரஹ்மா விற்பனை, உள்ளூர் மக்களுடன் மக்களின் விருந்து மற்றும் நட்பு அமர்வு ஆகியவையாகும்.


இத்திட்டம் மலேசிய மடானியின் கட்டமைப்பிற்குள் நல்வாழ்வு, கருணை போன்றவற்றை வலியுறுத்துவதாக உள்ளது. அதோடு மக்களுடனான நேரடித் தொடர்பையும் ஊக்குவிப்பதாக இருக்கிறது.

KSM

Related News