Jun 25, 2026
Thisaigal NewsYouTube
25 துப்புரவுப் பணியாளர்களுக்குத் தீபாவளி உணவுக் கூடைகள் அன்பளிப்பு
சிறப்பு செய்திகள்

25 துப்புரவுப் பணியாளர்களுக்குத் தீபாவளி உணவுக் கூடைகள் அன்பளிப்பு

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.08-

ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலகக் கட்டடத்தில் வேலை செய்து வரும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 25 துப்பரவு பணியாளர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் சார்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு, தீபாவளி உணவுக் கூடைகளை வழங்கி சிறப்பித்தார்.

வரும் தீபாவளித் திருநாளை இந்திய சமூகத்தினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வேளையில் இந்த மகிழ்ச்சியில் சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலகக் கட்டடத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களும் திளைத்திருக்கும் நோக்கில் அன்பளிப்புக் கூடைகள் வழங்கப்பட்டதாக பாப்பா ராய்டு குறிப்பிட்டார்.

25 தொழிலாளர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய அன்பளிப்புக் கூடைகளுடன் ரொக்க உதவித் தொகையும் வழங்கப்பட்டதாக பாப்பா ராய்டு தெரிவித்தார்.

இந்த தீபாவளி அன்பளிப்புத் திட்டமானது, குறைந்த வருமானம் பெறுகின்ற குறிப்பாக மாநில அரசாங்கக் கட்டத்தைச் சுத்தம் செய்தல், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் முதலிய பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ள குத்தகை நிறுவனத்தின் பணியாளர்களுக்கு உதவும் மாநில அரசின் சமூகக் கடப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று பாப்பா ராய்டு குறிப்பிட்டார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!