Apr 27, 2026
Thisaigal NewsYouTube
தீர்சன்னா, இளமாறன் தங்கப் பதக்கம் வென்று சாதனை
சிறப்பு செய்திகள்

தீர்சன்னா, இளமாறன் தங்கப் பதக்கம் வென்று சாதனை

Share:

கூலிம், ஆகஸ்ட்.07-

இந்தோனேசியாவில் நடைபெற்ற வோல்ட் ரோபோடிக்ஸ் & கம்பியூட்டர் சயின்ஸ் ஒலிம்பியாட் 2025 எனும் அறிவியல் புத்தாக்கப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கூலிம் பாயா பெசார் கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இளமாறன் முனியான்டி மற்றும் தீர்சன்னா முனியான்டி ஆகிய இரு மாணவர்கள் மலேசியாவிற்குத் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் மலேசியாவிலிருந்து கெடா சிலாங்கூர் , பஹாங், சபா மற்றும் ஜொகூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்வுச் செய்யப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கெடுத்தனர்.

அதில் கெடா மாநில அளவில் கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி மட்டுமே பங்கெடுத்தாக மாணவன் இளமாறன் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற இப்புத்தாக்கப் போட்டியில் "குளோரின் ஃபிரீ டாப் ஓஃப் வாட்டர்" எனும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியைச் செய்து அதில் வெற்றிப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற முடிந்ததாக இளமாறன் மற்றும் தீர்சன்னா கூறினர்.

நம் உபயோகிக்கும் தண்ணீரியிலுள்ள குளோரின் எனும் இராசயனத்தை தினமும் சமையலுக்கு உபயோகிக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தி வெளியேற்றம் செய்யும் வழிமுறைகளை புத்தாக்கப் போட்டியில் ஒப்புவிக்கப்பட்டது. அவ்வழிமுறைகளுக்கு கிடைத்த வெற்றியே இந்தத் தங்கப் பதக்கம் என்று இளமாறன் விவரித்தார்.

இப்புத்தாக்கப் போட்டியில் 11 உலக நாடுகளுடன் மலேசியாவிலிருந்து 179 மாணவர்களும் கலந்து கொண்டனர் . உலக நாடுகளுக்கு இடையில் மலேசியாவிலிருந்து கூலிம் பாயா பெசார் கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் சாதனையாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு