Apr 27, 2026
Thisaigal NewsYouTube
சபா தீர்ப்பு தொடர்பில் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்து மேல்முறையீடு
சிறப்பு செய்திகள்

சபா தீர்ப்பு தொடர்பில் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்து மேல்முறையீடு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

சபா மாநிலத்தின் வருவாயிலிருந்து 40 விழுக்காட்டுத் தொகையை அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு எதிராக கோத்தா கினபாலு உயர் நீதின்றம் அளித்த தீர்ப்பின் சில அம்சங்களை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மேல்முறையீடு நேற்று நவம்பர் 13 ஆம் தேதி புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசாங்கத்திற்கும், சபா மாநில அரசாங்கத்திற்கும் இடையில் இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக மறு ஆய்வுக்கான ஆதாரங்கள் இல்லாதது தொடர்பில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு சமர்ப்பித்துள்ளது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், 40 விழுக்காடு வருவாயைச் சபாவிற்கு வழங்குவது குறித்து மத்திய அரசாங்கம் மேல்முறையீடு செய்யவில்லை என்றார். ஆனால், 1974 ஆம் ஆண்டிலிருந்து சபாவிற்கு அந்த தொகையை வழங்குவதில் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் அம்சத்தை மட்டுமே எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று விளக்கம் அளித்து இருந்தார்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு