Jan 21, 2026
Thisaigal NewsYouTube
B40 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேருக்கு 100 ரிங்கிட்டுக்கான வவுச்சர்
சிறப்பு செய்திகள்

B40 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேருக்கு 100 ரிங்கிட்டுக்கான வவுச்சர்

Share:

பூச்சோங், நவம்பர்.08-

பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 150 பேருக்கு அத்தியாவசியப் பொருட்களை பேரங்காடியில் வாங்கிக் கொள்வதற்கான 100 ரிங்கிட் பெறுமானமுள்ள வவுச்சர்கள் இன்று வழங்கப்பட்டது.

B40 பிரிவைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி இந்த வவுச்சர்கள் வழங்கப்பட்டதாக பூச்சோங் எம்.பி. யியோ பி யின் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை மாலையில் பூச்சோங், 14 ஆவது மைல், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் யியோ பி யின் வவுச்சர்களை வழங்கினார்.

பூச்சோங் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் தங்களைப் பதிவு செய்து கொண்ட உண்மையிலேயே உதவித் தேவைப்படக்கூடிய ஏழ்மை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோவில் நிர்வாகத்தினால் அடையாளம் காணப்பட்டு, வழங்கப்பட்ட பரிந்துரைக்கு ஏற்ப இந்த வவுச்சர்கள், நேற்று வெள்ளிக்கிழமையும், இன்று சனிக்கிழமையும் வழங்கப்பட்டதாக யியோ பி யின் தெரிவித்தார்.

பூச்சோங் வட்டாரத்தில் சொந்த நிலப்பட்டாவைக் கொண்டுள்ள கோவில்களின் சீரமைப்புப் பணிகளுக்காக ஒரு முறை வழங்கக்கூடிய தலா 50 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் 10 கோவில்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதையும் யியோ பி யின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related News

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்