Oct 16, 2025
Thisaigal NewsYouTube
தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்
சிறப்பு செய்திகள்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.13-

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேருக்கு தாபுங் காசே ஹவானா நிதியகத்திலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது.

நாட்டின் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின், விஸ்மா பெர்னாமாவில் இன்று திங்கட்கிழமை தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தலைமையில் தாபுங் காசே ஹவானா நிதி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் ஊடகங்களில் பணிபுரியும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளானவர்களுக்கு மருத்துவச் சோதனை மற்றும் அவர்களின் குடும்பச் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நிதி உதவியை தாபுங் காசே ஹவானா சார்பில் துணை அமைச்சர் திய் வழங்கினார்.

மடானி அரசாங்கத்தின் மையக் கருப்பொருளான ‘சினாரி ஹராப்பான், உத்துக்கான் பெர்பாடுவான்’ உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிதி உதவியை பெர்னாமா தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சுன் வாய்யுடன் இணைந்து துணை அமைச்சர் தியோ வழங்கினார்.

16 பேருக்கும் ரொக்க நிதி உதவியும், தீபாவளி ஹெம்பர்களும் வழங்கப்பட்டன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசிய ஊடகவியலாளர் தினமான ஹவானா உதயமான போது, ஊடகத்துறையில் நலிவுற்ற பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் தாபுங் காசே ஹவானா தோற்றுவிக்கப்பட்டது. இதுவரையில் நாடு முழுவதும் உள்ள 532 ஊடகவியலாளர்கள் இந்த நிதியகத்தின் வாயிலாகப் பலன் பெற்றுள்ளனர்.

இந்நிகழ்வில் தொடர்புத்துறை அமைச்சின் கட்டமைப்பு, தொலைத்தொடர்பு துணைத் தலைமைச் செயலாளர் மனோ வீரபத்திரன், பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுகா நூருல் அஃபிடா கமாலுடின், பெர்னாமா தலைமை ஆசிரியரும், 2025 ஆம் ஆண்டுக்கான ஹவானா திட்டத்தின் இயக்குநருமான அருள்ராஜு துரை ராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

2026 பட்ஜெட் இந்திய சமூகத்திற்கு பல்வேறு அனுகூலங்களை வழங்க வல்லதாகும்

2026 பட்ஜெட் இந்திய சமூகத்திற்கு பல்வேறு அனுகூலங்களை வழங்க வல்லதாகும்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவ... | Thisaigal News