Jun 25, 2026
Thisaigal NewsYouTube
தியுடிஎம் வரலாற்றுடன் ஒன்றித்தவர் ரஞ்சிட் சிங்
சிறப்பு செய்திகள்

தியுடிஎம் வரலாற்றுடன் ஒன்றித்தவர் ரஞ்சிட் சிங்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

தியுடிஎம் எனப்படும் மலேசிய ஆகாயப் படையுடன் ஒன்றித்தவர் ரஞ்சிட் சிங் கில். வயது 78 ஆகிறது. ஒரு சீக்கியரான ரஞ்சிட் சிங், தியுடிஎம்மில் 36 ஆண்டுகள் பணியாற்றியவர்.

சீக்கியச் சமூகம் நாட்டின் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய நீண்ட நெடிய வரலாறு உண்டு. இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சீக்கியச் சமூகத்தின் எண்ணிக்கை உள்ளது.

ஜஸ்வான் சிங் என்பவர், தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் ஹெலிகாப்டர் ஓட்டுநர் ஆவார். அதன் பிறகு தியுடிஎம்மில் பெயர் சொல்லத்தக்கவர் ரஞ்சிட் சிங். மூவாயிரத்து 500 மணி நேரம் ஹெலிகாப்டரைச் செலுத்தி, பரந்த அனுபவத்தைக் கொண்டவர்.

கோலாலம்பூரைத் தளமாகக் கொண்ட ரஞ்சிட் சிங், ஒரு மருத்துவராக வர வேண்டும் என்றும் குடும்பம் விரும்பினாலும் அதற்கான பொருளாதார வசதியில்லை. பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து பல முறை விண்ணப்பித்து கடைசியில் தியுடிஎம் வேலை வாய்ப்பு கிடைத்தது.

கோலாலம்பூரிலிருந்து அடிக்கடி சபா, சரவாவிற்கு ஹெலிகாப்டரைச் செலுத்தியாக வேண்டும். 1968 இல் தியுடிஎம்மில் இணைந்த தமக்கு, பேரா, கெரிக்கில் கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளைத் துடைத்தொழிப்பதில் பெரும் பங்களிப்பு உள்ளதாக 2003 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ரஞ்சிட் சிங் , மெர்டேக்கா செய்தியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தியுடிஎம்மில் உயரிய பதவியான பிரிகேடியர் ஜெனரல் அந்தஸ்தைப் பெற்ற முதல் சீக்கியர் ரஞ்சிட் சிங் ஆவார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!