Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஶ்ரீ சிவசக்தி ஆரியம்மன் திருக்கோயிலின் மாபெரும் குடமுழக்கு விழா
ஆன்மிகம்

ஶ்ரீ சிவசக்தி ஆரியம்மன் திருக்கோயிலின் மாபெரும் குடமுழக்கு விழா

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.13-

சிலாங்கூர், ஷா ஆலாம் செக்‌ஷன் U 5 இல் வீற்றிருக்கும் ஶ்ரீ சிவசக்தி ஆரியம்மன் திருக்கோயிலின் மாபெரும் குடமுழக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த பக்தித் திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மலேசிய இந்துக் கோயில்கள், இந்து அமைப்புகள் பேரவை மஹிமாவின் தலைவர் டத்தோ சிவக்குமார், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமான், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் துவான் முகமட் இஸுவான் பின் அஹ்மாட் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த மாபெரும் குடமுழக்கு விழா காலை 5.00 மணிக்குத் தொடங்கியது. காலை 8.15 மணியளவில் சுந்தர விமானத்திற்கும், பரிவார விமானங்களுக்கும் திருக்குடமுழக்கு நடைபெற்றது. ரதனைத் தொடர்ந்து மூலவரான சிவ சக்தி அம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நன்னீராட்டு நடைபெற்றது.

வருகை புரிந்த பக்தர்கள் யாவரும் ஶ்ரீ சிவசக்தி அம்மனின் அருளும் ஆசியும் பெற்றதோடு நண்பகலில் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். இந்த திருவிழா சிறப்பாக நடைபெற ஆதரவாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இத்திருக்கோயிலின் தலைவர் கோபால் ஆறுமுகமும் செயலாளர் அருண் குமாரும் தங்களின் செயலவை சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு