Jun 5, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

சுங்கைபட்டாணி தைப்பூச விழா: ஜாலான் ஹஸ்பிட்டல், ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்திலிருந்து காவடிகள் புறப்பட்டன

Share:

மூன்று தினங்களுக்கு கொண்டாடப்படவிருக்கும் சுங்கைபட்டாணி தைப்பூச விழாவையொட்டி, ஜாலான் ஹாஸ்பிட்டல், ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் ரதக்காவடிகளை மற்றம் காவடிகளை ஏந்திக்கொண்டு, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலை நோக்கி புறப்பட தயாராகிக்கொண்டு இருக்கின்றனர்.

இரவு 8 மணியளவில் தொடங்கிய காவடிகள் புறப்பாடு அதிகாலை வரையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மகா முனீஸ்வரர் ஆலயத்திலிருந்து காவடிகள் ஏந்திய வண்ணம், சுமார் 20 நிமிட பயணத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலை சென்றடைந்து, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக ஆலயத் தலைவர் செல்வம் விவரித்தார்.

தைப்பூசத்தையொட்டி மகா முனீஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வை கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடத்தி வருவதாக ஒரு சீனப்பக்தரான Michael Saw தெரிவித்தார்.

இதேபோன்று தைப்பூசத்தையொட்டி கடந்த ஒன்பது ஆண்டுகளாக தண்ணீர் பந்தல் நிறுவி பக்தர்களின் தாகத்தை தணித்து வருவதாக அஜேய் விஜயன், ஷஷினிகாந்த் மற்றும் சுரேஸ் தேவன் தெரிவித்தனர்.

ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலிருந்து ஆயிரம் பால்குடங்கள், 60 பெரிய காவடிகள், 30 சிறியக் காவடிகள், 60 அலகுகாவடிகள், ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலை நோக்கி புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி