Jun 5, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

தேர் ஊர்வலம் வெகு விமரிசையாகத் தொடங்கியது

Share:

சுங்கை பட்டாணி, பிப்.12-

நேற்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுங்கைப்பெட்டாணி ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து இன்று மாலை 7 மணிக்குத் தேர் ஊர்வலம் வெகு விமரிசையாகத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ "அரோகரா" கோஷங்கள் விண்ணை முட்ட, வண்ணமயமான அலங்காரங்களுடன் தேர் நகர்ந்து சென்றது. தைப்பூச நாயகன் முருகப் பெருமான் தேர் ஊர்வலம் சுங்கை பட்டாணி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படுகிறது.

தேரோட்டத்தின் போது, பக்தர்களுக்கு அன்னதானமும் பானங்களும் வழங்கப்பட்டன. கோலாலம்பூர், பினாங்கு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சுங்கை பட்டாணிக்கு வந்து இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். தேரோட்டம் அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற ஆலய நிர்வாகத்தினரும் தன்னார்வலர்களும் இணைந்து செயல்பட்டனர்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி