Apr 21, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

கெசுமாவின் இளைப்பாறும் கூடாரங்கள், மிகப்பெரிய வெற்றியைத் தந்தன

Share:

கோலாலம்பூர், பிப்.13-

தைப்பூசத்தையொட்டி Kesuma எனப்படும் மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இளைப்பாறும் கூடாரங்கள், ஆக்ககரமான பலன்களைத் தந்துள்ளன.

குறிப்பாக, பத்துமலையில் ஏற்படுத்தப்பட்ட கெசுமாவின் கூடாங்கள், பக்தர்களுக்கு நல்ல விளைவுகளைத்
தந்துள்ளன. மனித வள அமைச்சர் Steven Sim-மினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பில் பக்தர்கள், குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், கடமையில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்காக இந்த இளைப்பாறும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன.

ஒரு நேரத்தில் 500 பேர் அமரக்கூடிய இந்த கூடாரங்கள் தைப்பூசத் தினமான பிப்ரவரி 11 ஆம் தேதி காலை முதல் ஏற்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஏழாயிரம் பேர் இந்த இளைப்பாறும் கூடாரங்களில் ஓய்வெடுத்துச் சென்றுள்ளனர்.

இளைப்பாறும் அதேவேளையில் கெசுமாவின் சொக்சோ, உடல் பரிசோதனை உட்பட பல்வேறு சேவைகளும் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டன.

Related News

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு