Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் சிவராத்திரி விழா

Share:

சிரம்பான், பிப்.26-

சிவபெருமானைப் போற்றும் சிவராத்திரி விழா, இன்றிரவு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் தொடங்கியது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேவஸ்தான அந்தஸ்தைப் பெற்ற முதல் ஆலயமான சிரம்பான் , தாமான் துவாங்கு ஜபார் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோவிலில், சிவராத்திரி விழா, சிறப்பு வழிபாடு களை கட்டியது.

இரவு 7.31 மணியளவில் மூத்த பிள்ளையார் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் , அபிஷேக ஆதாரனைகள், அம்மை அப்பர் நன்னீராட்டு தரிசனம், யாகசாலை பூஜை, பால் அபிஷேகம், கபாள மாலை அணிவிப்பு நிகழ்வுடன் சிவராத்திரி விழா தொடங்கியது.

சிவபெருமானின் அடையாளப் பிரதிப்பலிப்பாகத் திகழும் பஞ்சலோக சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்யும் நிகழ்வும் ஏக காலத்தில் தொடங்கியது.

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் தலைமையில் ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் உதவிக் குருக்கள் முன்னிலையில் தொடங்கிய சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் இரவு 9 மணி வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

இரவு முதல் விடியற்காலை வரை பக்தர்கள் கண்விழித்து 4 கால பூஜைகளிலும், அபிஷேக ஆதாரனைகளிலும் பங்கு கொள்வதற்கும், சிவபெருமானைத் தரிசிப்பதற்கும், தியானிப்பதற்கும் ஆலய நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளது.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு