Jan 17, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலைத் திருத்தலத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம்
ஆன்மிகம்

பத்துமலைத் திருத்தலத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம்

Share:

பத்துகேவ்ஸ், ஏப்ரல்.29-

வரும் மே முதல் தேதி வியாழக்கிழமை, பொது விடுமுறை தினத்தன்று பத்துமலைத் திருத்தலத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஆதரவுடன் டி.எஸ்.கே குழுமம் மற்றும் மலேசிய இந்து ஆலயங்கள், இந்து அமைப்புகள் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமா ஆகியவை இணைந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.00 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் விநாயகர் வழிபாடு நடைபெறும். தொடர்ந்து வேல்மாறல் ஆன்மீக சொற்பொழிவு, காவடி சிந்து குழுவினரின் காவடியாட்டம் இடம் பெறும். காலை 8.30 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடைபெறும்.

தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவின் ஆதவுடன் டி.எஸ்.கே குழுமத் தலைவரும், மஹிமாவின் தலைவருமான டத்தோ என். சிவகுமார் தலைமையில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம், அதிகமான முருகப் பக்தர்களில் இல்லங்களில் அனுதினமும் ஓதக்கூடிய மகா மந்திரமாகும்.

வீரம், நம்பிக்கை, மன வலிமையைத் தந்து மக்களைப் பாதுகாக்கும் கவசமாக விளங்கும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்குரிய வழிபாட்டு பாராயணத்திற்குச் சிறப்பு சேர்க்குமாறு டி.எஸ்.கே குழுமம் மற்றும் மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு