Jun 5, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

பினாங்கு தைப்பூச விழா வெள்ளி இரதத்தை இழுக்க 17 ஜோடி காளைகள் பயன்படுத்தப்படும்

Share:

ஜோர்ஜ்டவுன், பிப்.4-

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் பினாங்கு தைப்பூச விழாவையொட்டி பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலையில் வெள்ளி இரதம், பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோவில் வீட்டிலிருந்து தண்ணீர்மலை, அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலை நோக்கி புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி இரதத்தை இழுப்பதற்கு 17 ஜோடி என மெத்தம் 34 காளைமாடுகள் பயன்படுத்தப்படும் என்று பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தலைவர் டாக்டர் A. நாராயணன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஜோடி காளைகளும், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் குறைவாகவே இரதத்தை இழுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். 17 ஜோடி காளைகளும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே ஒவ்வொரு ஜோடி என மாற்றப்பட்டு கொண்டே இருக்கும் என்பதால் காளைகள் வதை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது.

இந்த 17 ஜோடி காளைகளும் கால்நடை இலாகாவினால் சோதனை செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் நாராயணன் இன்று திசைகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

இரத ஊர்வலத்தின் போது, பொது மக்கள், இரதம் அருகில் வரும் வரை காத்திருக்காமல், இரதம் கண் எதிரே தெரிந்தவுடன் கையெடுத்து வணங்கி, தேங்காய்களை உடைத்து, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தத் தொடங்கலாம்.

இதன் மூலம் வெள்ளி இரதம் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் மலையை சென்றடையவும், நேர சுணக்கத்தைக் குறைப்பதற்கும், பூஜைகள் குறித்த நேரத்தில் நடைபெறுவதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று டாக்டர் நாராயணன் விவரித்தார்.

வெள்ளி இரதம் எங்கே வந்து கொண்டிருக்கிறது, எவ்ளவு தூரத்தில் நின்று கொண்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்வதற்கு Chariot Tracker செயலி பொருத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்கள் திறன் கைப்பேசி வாயிலாக QR குறியீட்டை ஸ்கேன் செய்து கொள்வார்களோனால் இரதம் இருக்கும் இடம்,அதன் புறப்பாட்டை தெரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று டாக்டர் நாராயணன் தெரிவித்தார்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி