Jul 21, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு
ஆன்மிகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

Share:

குளுவாங், நவம்பர்.29-

ஜோகூர், குளுவாங்கில் நடைபெற்று வரும் மாபெரும் சமய மாநாட்டில் மலேசிய மண்ணில் இந்து சமயத்தின் வளர்ச்சிக்கும், சமய நெறி மேன்மைக்கும், வழிபாட்டு முறைக்கும், சமய தெளிவுரைக்கும் தங்களின் வாழ்நாள் தவமாக, சேவையாற்றி வரும் மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

புக்கிட் ரோத்தான் சக்தி திருக்கோயிலின் ஸ்தாபகரும், மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் முதன்மை ஆலோசகருமான சிவஸ்ரீ அ.ப. முத்துகுமார சிவாச்சாரியார், மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமட ஸ்தாபகர் மகேந்திர சுவாமிகள் மற்றும் சுபாங் ஜெயா, பன்னிரு திருமுறை வளர்ச்சி மையத்தின் பொறுப்பாளர் ஆர்திமூலம் ஆகியோரே மாநாட்டில் கெளரவிக்கப்பட்ட சமய ஆன்றோர்களாவர்.

குளுவாங், தாமான் பெர்சத்து, ஜாலான் பத்து பஹாட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கணேசன் சுப்பையா முன்னிலையில் இரு தினங்களுக்கு நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டுக்கான மாபெரும் சமய மாநாட்டின் தொடக்க விழாவில் மூன்று சமய ஆன்றோர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கெளரவிப்பு நிகழ்வில் சிவஸ்ரீ அ.ப. முத்துகுமார சிவாச்சாரியாருக்கு வாழ்நாள் ஆன்மீக சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சமய வளர்ச்சிக்கும், ஆலய மேம்பாட்டிற்கும், சமயம் சார்ந்த சொற்பொழிவுகளின் வாயிலாக சமய அரும்பணியை ஆற்றி வரும் மகேந்திர சுவாமிகள் அவர்களுக்கு அருளுரை செம்மல் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

இந்து சமய வளர்ச்சிக்கும், தேவாரம், திருமுறை அறியவும், பயிலவும், பயிற்றுவிக்கவும் அளப்பரிய சமயப் பணியாற்றி வரும் ஆர்திமூலம் அவர்களுக்கு அருளுடை அண்ணல் எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் சொ. சொ. மீ. சுந்தரம் முன்னிலையில் மூன்று சமய ஆன்றோர்களுக்கும் பொன்னாடை, மாலை அணிவித்து, பாராட்டு பட்டயமும் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் திரளாக கலந்த கொண்ட முதல் நாள் மாநாட்டில் இடம் பெற்ற ஆன்றோர்களின் சமய சொற்பொழிவுகள் மற்றும் சமய தெளிவுரைகள் இந்து சமயத்தின் மேன்மையை உயர்த்தும் வகையில் அமைந்தன.

Related News

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்