Jun 5, 2026
Thisaigal NewsYouTube
திருக்கயிலைத் திருத்தலப் பயணம்
ஆன்மிகம்

திருக்கயிலைத் திருத்தலப் பயணம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.09-

திருக்கயிலாயப் பரம்பரை பேரூராதீனம், தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் தலைமையில் திருக்கயிலைத் திருத்தலப் பயணம், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பூவுலகப் பருக் கயிலை என சைவர்களால், சிவனடியார்களால் போற்றப்படும் மிக உயர்ந்த சிவத் தலமான கயிலை மலைக்கு, குரு அருளும் திருவருளும் முன் நிற்க, திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதினம் 25 ஆம் குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில் திருத்தலப் பயணத்தில் பங்கு கொள்கின்றவர்களுக்கு, அடிகளாரின் ஆன்மீக நடவடிக்கைகளில் பங்கு கொள்ள அற்புத வாய்ப்பு ஏற்பாடு‌ செய்யப்பட்டுள்ளது.

கிடைப்பதற்கு அரிதான ஒரு வாய்ப்பு நமது தவத்திரு அடிகளாருடன் திருத்தலப் பயணம் மேற்கொள்வது. ஆதலால் அன்பர் பெருமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கயிலைமலையானின் திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றனர் மையாத்ரா எம்பயர் டிராவல் & டூர்ஸ் குழுவினர்.

இத்திருக்கயிலைத் பயணத்தில் பங்கு கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மணி, +6012- 3073565 ( மலேசியா )

பரமேஸ்வரி, +6011– 33561877 ( மலேசியா )

கணேஷ், +919865055566 ( இந்தியா )

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி