Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

தைப்பூசத்திற்கு கெடாவில் சிறப்பு விடுமுறை

Share:

அலோர் ஸ்டார், பிப்.4-

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பூச விழா கொண்டாடப்படுவதையொட்டி கெடா மாநிலத்தில் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று மாநில அரசாங்க துணை செயலாளர் டத்தோ டாக்டர் நட்ஸ்மான் முஸ்தப்பா அறிவித்துள்ளார்.

1951 ஆம் ஆண்டு தொழில் சட்டம் 9 ஆவது பிரிவின் கீழ் தைப்பூசத்திற்கு கெடா மாநிலத்தில் இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான சுற்றறிக்கை கெடா மாநில அரசு இலாகாக்களுக்கும், கூட்டரசு அரசாங்கத்திற்கும் அனுப்பப்பட்டு விட்டதாக டாக்டர் நட்ஸ்மான் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தைப்பூச விழாவை கெடா மாநிலத்தில் உள்ள இந்துக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக தைப்பூச விடுமுறையை மாநில ஆட்சிக்குழு அங்கீகரிக்கப்பட்ட விவகாரத்தை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி கெடா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி