Jan 17, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் மேலும் சமய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு  மத்திய அரசாங்கம் 10 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
ஆன்மிகம்

பினாங்கில் மேலும் சமய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு மத்திய அரசாங்கம் 10 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மேலும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்கும், அந்த வாரியத்தின் கீழ் உள்ள இந்து ஆலயங்களின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மத்திய அரசாங்கத்தின் மூலம் 10 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 இந்திய சமுதாயத்தின் சமூகவியல், பொருளாதார உயர்விற்குப் பல்வேறு திட்டங்களின் வாயிலாக 42.25 மில்லியன் ரிங்கிட்டையும், தர்ம மடானி திட்டத்தின் கீழ் இந்து ஆலயங்களுக்கு உதவுவது உட்பட இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டையும் , ஒதுக்கியிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு, ராயர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில் பத்துமலை திருத்தலத்திற்குப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு பிரதமர், 10 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதைக் கண்டு தாம் மகிழ்ச்சி கொள்வதாக ராயர் குறிப்பிட்டார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் என்ற முறையில் தமது தலைமைத்துவத்தில் உள்ள வாரியத்திற்கும் 10 லட்சம் ரிங்கிட் நிதியை வழங்குவதற்கு பிரதமர் ஆவனம் செய்ய வேண்டும் என்று ராயர் கேட்டுக் கொண்டார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கணக்கு அறிக்கை தேசிய கணக்காய்வுக் குழுவால் தணிக்கை செய்யப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அந்த கணக்கு அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதே போன்று அரசாங்கம் வழங்கக்கூடிய இந்த 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கணக்கு அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்று ராயர் குறிப்பிட்டார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம், சமய நடவடிக்கைகளுக்கு மேலும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றுவதற்கு ஓர் உன்னத நோக்கத்திற்காகக் கோரப்படும் இந்த நிதி ஒதுக்கீட்டை பிரதமர் அங்கீரிக்க வேண்டும் என்று ராயர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு