Jun 5, 2026
Thisaigal NewsYouTube
கட்டணமில்லா பயணம்... கவலையில்லா தரிசனம் பத்துமலையில் போக்குவரத்து அமைச்சின் அதிரடிச் சேவை - பக்தர்கள் நெகிழ்ச்சி
ஆன்மிகம்

கட்டணமில்லா பயணம்... கவலையில்லா தரிசனம் பத்துமலையில் போக்குவரத்து அமைச்சின் அதிரடிச் சேவை - பக்தர்கள் நெகிழ்ச்சி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.31-

தைப்பூசத்தையொட்டி பத்துமலைத் திருத்தலத்திற்குப் பயணிக்கும் பக்தர்களுக்கு, இவ்வாண்டும் ஒரு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி தரப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு மற்றும் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டும் இணைந்து இன்று ஜனவரி 31 ஆம் தேதியும், நாளை பிப்ரவரி முதல் தேதியும் இலவச ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது.

பத்துமலைக்குச் செல்லும் பக்தர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கினால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குக் கட்டணமில்லா ரயில் சேவையில் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலின்றி பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்த பக்தர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்றனர்.

கேடிஎம்பி மூலம் போக்குவரத்து அமைச்சின் இந்த மகத்தான முன்னெடுப்பு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சாமானிய மக்களின் சுமையையும் குறைத்து இருப்பது இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை மேலும் இனிமையாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி