Jul 21, 2026
Thisaigal NewsYouTube
பக்திப் பயணத்தில் எல்லைக் கடக்கும் வேலவன்: கோலாலம்பூர் - சிலாங்கூர் போலீசாருக்கு இடையே அதிகாரப்பூர்வ பாதுகாப்பு மாற்றம்
ஆன்மிகம்

பக்திப் பயணத்தில் எல்லைக் கடக்கும் வேலவன்: கோலாலம்பூர் - சிலாங்கூர் போலீசாருக்கு இடையே அதிகாரப்பூர்வ பாதுகாப்பு மாற்றம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.31-

கோலாலம்பூர் தலைநகரின் பிரதான வீதிகளில் சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாகப் பவனி வந்த முருகப் பெருமானின் வெள்ளி ரதம், தற்போது கோலாலம்பூர் எல்லையைக் கடந்து சிலாங்கூர் மாநில எல்லைக்குள் நுழைந்துள்ளது. இதனை முன்னிட்டு, அதுவரை ரதத்திற்குப் பாதுகாப்பு அரணாக இருந்த கோலாலம்பூர் போலீசார், ரதத்தின் பாதுகாப்புப் பொறுப்பைச் சிலாங்கூர் போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தனர்.

நேற்று இரவு 9 மணிக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ரத ஊர்வலம், இன்று இரவு 8.30 மணியளவில் பத்துமலை சாலை வட்டத்தின் எல்லைப் பகுதியை வந்தடைந்தது. அங்கே இரு மாநில போலீசாருக்கும் இடையே நடைபெற்ற இந்த 'பாதுகாப்புப் பொறுப்பு மாற்றும் நிகழ்வு மிகவும் நேர்த்தியாகவும், பக்தி மணம் கமழவும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இனி ரதம் பத்துமலை திருத்தலத்தை அடையும் வரை சிலாங்கூர் மாநில போலீசார் தங்களின் பாதுகாப்புப் பணியைத் தொடரவுள்ளனர். வெள்ளி ரதத்தின் இந்த நெடிய பயணத்தில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கோலாலம்பூர் போலீசாருக்குப் பக்தர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்

சுமார் 24 மணி நேரத்தை நெருங்கும் இந்த நெடிய பயணத்தில், கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் சற்றும் அயராது, பக்தர்களின் பாதுகாப்பையே பிரதானமாகக் கொண்டு பணியாற்றிய காவல்துறையினரின் கடமையுணர்வு மெச்சத்தக்கது.

Related News

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்