Jan 31, 2026
Thisaigal NewsYouTube
நவீன உலகின் சவால்களை வெல்ல முருகனின் 'ஞானவேல்' துணை நிற்கட்டும்: இந்திய இளைஞர்களுக்கு அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தைப்பூச வாழ்த்து
ஆன்மிகம்

நவீன உலகின் சவால்களை வெல்ல முருகனின் 'ஞானவேல்' துணை நிற்கட்டும்: இந்திய இளைஞர்களுக்கு அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தைப்பூச வாழ்த்து

Share:

கோலாலம்பூர், ஜனவரி.31-

மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், முருகப் பெருமானின் ஞானவேல் போல இளைஞர்களின் அறிவாற்றல் நவீன காலத்திற்கு ஏற்ப விரிவடைய வேண்டும் என தைப்பூச வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பங்களைச் சவாலாகப் பார்க்காமல், பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பாகக் கருதி இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக HRD Corp மூலம் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 'வெற்றி மடானி' திட்டம் செயல்படுத்தப்படுவதை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்திய இளைஞர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், நவீன தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உருவெடுக்க வேண்டும் என்பதே தமது கனவு என அமைச்சர் ரமணன் சுட்டிக் காட்டினார்.

முருகப் பெருமானின் ஞானவேல் எவ்வாறு கூர்மையாகவும், ஆழமாகவும், அகலமாகவும் இருக்கிறதோ, அதே போல் நமது இளைஞர்களின் சிந்தனையும், தொழில்நுட்பத் திறன்களும் உலகத் தரத்திற்கு உயர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நமது சமூகத்தின் பொருளாதார வலிமை என்பது அறிவாற்றல் சார்ந்த பொருளாதாரத்தில் அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்திய அவர், இந்தியச் சமூகம் ஒரு போதும் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் தமது அமைச்சரவை உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தைப்பூசத் திருநாள், இந்திய இளைஞர்கள் அனைவரும் டிஜிட்டல் யுகத்தின் வெற்றியாளர்களாக மாற ஒரு புதிய தொடக்கமாய் அமையட்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மங்கலகரமாகப் பகிர்ந்து கொண்டார்.

Related News

இனங்களைக் கடந்த ஈரம்... ஜாலான் ஈப்போவில் 4-வது ஆண்டாக முடா-வின் தண்ணீர் பந்தல்: பல்லின இளைஞர்களுடன் களம் இறங்கிய அமீரா ஆயிஷா!

இனங்களைக் கடந்த ஈரம்... ஜாலான் ஈப்போவில் 4-வது ஆண்டாக முடா-வின் தண்ணீர் பந்தல்: பல்லின இளைஞர்களுடன் களம் இறங்கிய அமீரா ஆயிஷா!

பினாங்கு தைப்பூசத்தை முன்னிட்டு தங்க இரதமும், வெள்ளி இரதமும் தண்ணீர் மலை நோக்கி புறப்பட்டன: வீதிகளெங்கும் 'அரோகரா' எதிரொலிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

பினாங்கு தைப்பூசத்தை முன்னிட்டு தங்க இரதமும், வெள்ளி இரதமும் தண்ணீர் மலை நோக்கி புறப்பட்டன: வீதிகளெங்கும் 'அரோகரா' எதிரொலிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

அன்னை மடியில் ஆசி பெற்று... பத்துமலை நோக்கிப் புறப்பட்டது அழகன் முருகனின் வெள்ளி ரதம்

அன்னை மடியில் ஆசி பெற்று... பத்துமலை நோக்கிப் புறப்பட்டது அழகன் முருகனின் வெள்ளி ரதம்

பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி