Jan 31, 2026
Thisaigal NewsYouTube
இனங்களைக் கடந்த ஈரம்... ஜாலான் ஈப்போவில் 4-வது ஆண்டாக முடா-வின் தண்ணீர் பந்தல்: பல்லின இளைஞர்களுடன் களம் இறங்கிய அமீரா ஆயிஷா!
ஆன்மிகம்

இனங்களைக் கடந்த ஈரம்... ஜாலான் ஈப்போவில் 4-வது ஆண்டாக முடா-வின் தண்ணீர் பந்தல்: பல்லின இளைஞர்களுடன் களம் இறங்கிய அமீரா ஆயிஷா!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.31-

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் மூடா (MUDA) கட்சியின் சார்பில் 2026-ஆம் ஆண்டுக்கான தைப்பூசத் தண்ணீர் பந்தல் சேவை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் சிவபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தத் தொண்டுப் பணியில், நாட்டின் பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னார்வலர்களாக ஒன்றிணைந்து பக்திப் பெருக்கோடு வருகை தந்த பக்தர்களுக்கு இலவச பானங்களை விநியோகித்தனர்.

கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இந்தச் சேவையை வழங்கி வரும் மூடா, இதன் மூலம் இளைஞர்களிடையே சமூகச் சேவையையும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் பறைசாற்றியுள்ளது.

இந்த நற்பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஜோகூர் புத்ரி வங்சா சட்டமன்ற உறுப்பினரும், மூடா கட்சியின் முக்கியத் தலைவருமான அமீரா ஆயிஷா நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார். தைப்பூசம் என்பது வெறும் சமயம் சார்ந்த திருவிழா மட்டுமல்ல, அது மனிதாபிமானத்தையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும் களம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது என டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆற்றிய இந்தப் பணி, மலேசியாவின் பன்முகத்தன்மைக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்றார் டாக்டர் சிவபிரகாஷ்.

Related News

நவீன உலகின் சவால்களை வெல்ல முருகனின் 'ஞானவேல்' துணை நிற்கட்டும்: இந்திய இளைஞர்களுக்கு அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தைப்பூச வாழ்த்து

நவீன உலகின் சவால்களை வெல்ல முருகனின் 'ஞானவேல்' துணை நிற்கட்டும்: இந்திய இளைஞர்களுக்கு அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தைப்பூச வாழ்த்து

பினாங்கு தைப்பூசத்தை முன்னிட்டு தங்க இரதமும், வெள்ளி இரதமும் தண்ணீர் மலை நோக்கி புறப்பட்டன: வீதிகளெங்கும் 'அரோகரா' எதிரொலிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

பினாங்கு தைப்பூசத்தை முன்னிட்டு தங்க இரதமும், வெள்ளி இரதமும் தண்ணீர் மலை நோக்கி புறப்பட்டன: வீதிகளெங்கும் 'அரோகரா' எதிரொலிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

அன்னை மடியில் ஆசி பெற்று... பத்துமலை நோக்கிப் புறப்பட்டது அழகன் முருகனின் வெள்ளி ரதம்

அன்னை மடியில் ஆசி பெற்று... பத்துமலை நோக்கிப் புறப்பட்டது அழகன் முருகனின் வெள்ளி ரதம்

பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி