Jun 5, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது
ஆன்மிகம்

பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.30-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலைத் திருத்தலத்திற்குச் சிறப்பு வருகை மேற்கொண்டார். கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜாவின் அழைப்பை ஏற்று, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவர் வருகை தந்தார்.

பத்துமலைக்கு வருகை தந்த பிரதமரைத் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா மற்றும் அதன் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துச் சிறப்புடன் வரவேற்றனர்.

பிரதமரின் இந்த வருகையையொட்டி, தேவஸ்தானம் மற்றும் அமைச்சர்கள் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், கோபிந்த் சிங், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் சார்பில் பிரதமருக்குச் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நாட்டின் முன்னணி ஓவியர் லேனா அவர்களால் வரையப்பட்ட பிரதமரின் திருவுருவ ஓவியம், அந்த ஓவியருடன் இணைந்தே பிரதமரிடம் வழங்கப்பட்டது.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி