Jan 30, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது
ஆன்மிகம்

பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.30-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலைத் திருத்தலத்திற்குச் சிறப்பு வருகை மேற்கொண்டார். கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜாவின் அழைப்பை ஏற்று, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவர் வருகை தந்தார்.

பத்துமலைக்கு வருகை தந்த பிரதமரைத் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா மற்றும் அதன் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துச் சிறப்புடன் வரவேற்றனர்.

பிரதமரின் இந்த வருகையையொட்டி, தேவஸ்தானம் மற்றும் அமைச்சர்கள் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், கோபிந்த் சிங், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் சார்பில் பிரதமருக்குச் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நாட்டின் முன்னணி ஓவியர் லேனா அவர்களால் வரையப்பட்ட பிரதமரின் திருவுருவ ஓவியம், அந்த ஓவியருடன் இணைந்தே பிரதமரிடம் வழங்கப்பட்டது.

Related News

அன்னை மடியில் ஆசி பெற்று... பத்துமலை நோக்கிப் புறப்பட்டது அழகன் முருகனின் வெள்ளி ரதம்

அன்னை மடியில் ஆசி பெற்று... பத்துமலை நோக்கிப் புறப்பட்டது அழகன் முருகனின் வெள்ளி ரதம்

பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி

சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 80,000 பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு; 494 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்

சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 80,000 பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு; 494 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்

பத்துமலைக்கு வருகை புரியும் பிரதமரிடம் எதுவும் கேட்கப் போவதில்லை: தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கூறுகிறார்

பத்துமலைக்கு வருகை புரியும் பிரதமரிடம் எதுவும் கேட்கப் போவதில்லை: தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கூறுகிறார்

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா: ஆகம முறைப்படி காணிக்கை செலுத்த வேண்டும்

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா: ஆகம முறைப்படி காணிக்கை செலுத்த வேண்டும்