கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
கடந்த 9 திகதி ஆகஸ்ட் மாதம் பேரூர் ஆதினம் மற்றும் Myyatra Empire Travel and Tours ஏற்பாட்டில் திருக்கயிலாய திருத்தலப் பயணம் சிறப்பாக நடைபெற்றது. இப்பயணத்தில் சிறப்பு வருகையாளராக திருக்கயிலாயப் பரம்பரை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும் மற்றும் தமிழகத்தில் சுமார் 15 அடியார் பெருமக்களும் மலேசியாவில் இருந்தும் அடியார் பெருமக்கள் கலந்து கொண்டனர். இக்கயிலாய யாத்திரை சிவபெருமான் திருவருளோடும் குரு அருளோடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மீண்டும் அடுத்த 2026 ஆம் ஆண்டு திருக்கயிலாயத் திருத்தலப் பயணம் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
இக்கயிலாய யாத்திரையில் சிறப்பு வருகையாளராக பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொள்ள இருக்கின்றார். ஆகையால் திபெத்தில் அமர்ந்து அருள் புரியும் கயிலையம்பதி பெருமானைக் காண விரும்பும் அன்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
