Jan 6, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தைப்பூசத்திற்கு மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை புரிய வாய்ப்பு
ஆன்மிகம்

பினாங்கு தைப்பூசத்திற்கு மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை புரிய வாய்ப்பு

Share:

ஜார்ஜ்டவுன், ஜனவரி.05-

எதிர்வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி, உலகெங்கிலும் தைப்பூச திருவிழா அனுசரிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாண்டு பினாங்கிற்கு வருகை புரியவிருக்கும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், கூட்டத்தை சீரான முறையில் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பினாங்கு தைப்பூசத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என போலீஸ் தரவுகளும் கூறும் நிலையில், இவ்வாண்டு தைப்பூச தினமானது வார இறுதியில் அனுசரிக்கப்படுவதால், பக்தர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டும் என்பது உறுதி என்றும் லிங்கஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், சென்னை – பினாங்கு இடையிலான நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டதையடுத்து, இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு வயதான பக்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்வதற்காக, அறப்பணி வாரியமும், கோயில் நிர்வாகமும் இணைந்து சிறப்பு போக்குவரத்துச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தைப்பூச நாளில் அதிக கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல், பக்தர்கள், பாதுகாப்பாக வழிபாடுகளையும், விரதங்களையும் மேற்கொள்ள இச்சேவை உதவும் என்றும் லிங்கஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related News

பத்துமலை மின்படிக்கட்டுத் திட்டம்: பக்தர்களின் வசதியா? தனிநபரின் ஆதாயமா? தேவஸ்தானத்தை நோக்கிப் பாய்ந்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு

பத்துமலை மின்படிக்கட்டுத் திட்டம்: பக்தர்களின் வசதியா? தனிநபரின் ஆதாயமா? தேவஸ்தானத்தை நோக்கிப் பாய்ந்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு

அர்ச்சகர் விவகாரத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் மலேசிய இந்து அர்ச்சகர் சங்கம் வலியுறுத்து

அர்ச்சகர் விவகாரத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் மலேசிய இந்து அர்ச்சகர் சங்கம் வலியுறுத்து

சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க ஆலயங்களை அரசாங்க பதிவேட்டில் ஆவணப்படுத்துங்கள்-  அறிவுறுத்தினார் டத்தோ அ.சிவநேசன்

சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க ஆலயங்களை அரசாங்க பதிவேட்டில் ஆவணப்படுத்துங்கள்- அறிவுறுத்தினார் டத்தோ அ.சிவநேசன்

புக்கிட் கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்னைக்குச் சுமூகமாகத் தீர்வு

புக்கிட் கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்னைக்குச் சுமூகமாகத் தீர்வு

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு