Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் பிப்ரவரி 1-ம் தேதி பொது விடுமுறை
ஆன்மிகம்

தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் பிப்ரவரி 1-ம் தேதி பொது விடுமுறை

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.22-

தைப்பூசத் திருவிழாவையொட்டி, கெடா மாநில அரசாங்கம், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர் தலைமையில் நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

கெடா மாநில நிர்வாகத்திற்கான துணைச் செயலாளர் டத்தோ டாக்டர் நாட்ஸ்மான் முஸ்தஃபா கையொப்பமிட்ட அந்த அதிகாரப்பூர்வ கடிதத்தின்படி, இந்த விடுமுறையானது விடுமுறைச் சட்டம் 1951, சட்டம் 369, பிரிவு 9(1)-இன் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளின் தலைவர்கள், சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்கள், அத்துடன் மாநிலத்தில் உள்ள ஊராட்சித் துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதமானது, நேற்று சனூசியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பகிரப்பட்டது.

Related News

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான  திருக்கோயிலில்  மஹா சிவராத்திரி விழா

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்