Mar 4, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

21 நேர பயணத்திற்குப் பின்னர் பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்தது வெள்ளி இரதம்

Share:

பத்துமலை, பிப்.10-

தைப்பூச விழாவையொட்டி, கோலாலம்பூர், Jalan Tun H.S. Lee-யில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட வெள்ளி இரதம், 21 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று மாலை 7.00 மணியளவில் பத்துலை திருத்தலத்தை வந்தடைந்தது.

பத்துமலை தைப்பூச வரலாற்றில், இரதம் நீண்ட நேரம் பயணம் செய்து, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.

கோலாலம்பூரிலிருந்து பல்வேறு சாலைகளை கடந்து, வழிநெடுகிலும் பக்தர்களின் அர்ச்சனையை ஏற்று, ஸ்ரீ முருகன் பெருமான், தாம் குடிகொண்டு இருக்கும் பத்துமலைத்திருத்தலத்தை வந்தடைந்த போது, பக்தர்கள், கைவணங்கி, தைப்பூச உற்சவ மூர்த்தியை வரவேற்றனர்.

வெள்ளி இரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்ததும், அருள்மிகு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Related News

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான  திருக்கோயிலில்  மஹா சிவராத்திரி விழா

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

புதிய நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மீள் எழுச்சி - யங் செபுரா ஓத்மான் பெருமிதம்

புதிய நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மீள் எழுச்சி - யங் செபுரா ஓத்மான் பெருமிதம்

சிலாங்கூர் ஆலயப் பிரச்சினைகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்வு: வீ. பாப்பாராய்டு அதிரடி அறிவிப்பு

சிலாங்கூர் ஆலயப் பிரச்சினைகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்வு: வீ. பாப்பாராய்டு அதிரடி அறிவிப்பு