Jun 5, 2026
Thisaigal NewsYouTube
பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு
ஆன்மிகம்

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.08-

இவ்வாண்டு, பஞ்சாங்கத்தின் படி, பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் என மலேசிய இந்து சங்கம் அறிவித்துள்ளது.

மங்களகரமான தை மாதத் தொடங்கத்தின், முதல் நாளில் பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பஞ்சாங்கத்தின் படி, இவ்வாண்டு அந்நாளானது, ஜனவரி 15-ஆம் தேதி அனுசரிக்கப்படுவதாக மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டி. கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு, ஜனவரி 14-ஆம் தேதி இரவு 9.23 மணியளவில், தை பிறப்பதால், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட அந்த நேரம் ஏதுவாக இருக்காது என்றும் டி. கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, ஜனவரி 15-ஆம் தேதி காலை பொங்கல் வைத்து வழிபடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், ஜனவரி 15-ஆம் தேதி அதிகாலை 6.10 முதல் 7.20 மணியளவிலும், அதனையடுத்து, 9.10 முதல் 11.30 மணியளவிலும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஏதுவான மங்களகரமான நேரம் என்றும் டி. கணேசன் தெரிவித்துள்ளார்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி