Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

பினாங்கு போலீஸ் தலைவருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு

Share:

பினாங்கு, ஜன.27-

வரும் பிப்வரி 11 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பினாங்கு தைப்பூச விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், விழா சுமூகமாக நடைபெறுவதற்கும் ஏதுவாக பினாங்கு இந்து அறப்பணி வாரியப் பொறுப்பாளர்கள், பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மட்டுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடத்தினர்.

பினாங்கில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய உற்சவ விழாவான தைப்பூச விழாவில் கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களும் பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கு RSN ராயர் தலைமையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் பொறுப்பாளர்கள் டத்தோ ஹம்சாவையும், உயர் போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்தனர்.

அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன், ஆணையர் டத்தோ J. தினகரன் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கூட்ட நெரிசலை கண்காணித்தல், அனுசரிக்கப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல், பொது ஒழுங்கு முறையை பேணுதல் உட்பட பல தரப்பட்ட விவகாரங்களும் இரு தரப்பிலும் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டது.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பினாங்கு போலீஸ் தலைவருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு | Thisaigal News