Jun 5, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

சுங்கை பட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய தைப்பூச விழாவில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள்

Share:

சுங்கை பட்டாணி, பிப்.5-

கெடா மாநிலத்தல் 115 ஆண்டுகால வரலாற்றைக்கொண்ட சுங்கை பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டு தைப்பூச விழா வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி, பிப்ரவரி 12 ஆம் தேதி புதன்கிழமை வரை மூன்று தினங்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது.

இவ்வாண்டு தைப்பூச விழா, கடந்த ஆண்டை விடஇன்னும் அதிகமான பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 3 லட்சம் பக்தர்கள் இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுங்கை பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தலைவர் இராஜேந்திரன் பெரியசாமி தெரிவித்தார்.

கொடியேற்றும் வைபவம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி 9 ஆம் தேததி வரை உபயங்கள் நடைபெற்று வருவதாக பெரியசாமி விவரித்தார்.

பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் தைப்பூச விழாவை முன்னிட்டு கெடா மாநில அரசாங்கம் சிறப்பு விடுமுறையை அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் சார்பாக மாநில அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக சுங்கை பட்டாணியில் தேவஸ்தானப் பொறுப்பாளர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இராஜேந்திரன் தெரிவித்தார்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி