Jun 5, 2026
Thisaigal NewsYouTube
கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா
ஆன்மிகம்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

Share:

கோலாலம்பூர், ஜனவரி.12-

திருக்கைலாயப் பரம்பரை மெய் கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம், மலேசியா சுந்தர சிவயோக ஆசிரமம் மற்றும் மலேசியா சிவனடியார் திருச்சபை ஏற்பாட்டில் வருகின்ற ஜனவரி 24 ஆம் தேதி சனிக்கிழமை தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் அருளாசியுடன் கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழா காலை 7 மணி தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடையும். திருவாசகம் முற்றோதல் என்பது மாணிக்கவாசகப் பெருமான் அருள சிவபெருமான் கைப்பட எழுதிய நூலை ஒரே நாளில் 658 பாடல்களைப் பாடி நிறைவு செய்யும் ஒரு பெரும் கூட்டு வழிபாடு ஆகும்.

இவ்விழாவில் மலேசியாவில் இருந்து அடியார் பெருமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். அதுமட்டுமின்றி 7 கொங்கு நாட்டு சிவத் திருத்தல பயணமும் மேற்கொள்ள இருக்கின்றார்கள். ஆகையால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு மலேசியாவில் உள்ள அடியார்களும் தமிழ்நாட்டில் உள்ள அடியார் பெருமக்களும் இத்திருவாசகம் முற்றோதலில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி