Aug 19, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய ஆண்டுக்கூட்டத்தில் சலசலப்பு கடும் வாக்குவாதத்தால் கூட்டம் ஒத்திவைப்பு
ஆன்மிகம்

ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய ஆண்டுக்கூட்டத்தில் சலசலப்பு கடும் வாக்குவாதத்தால் கூட்டம் ஒத்திவைப்பு

Share:

சுபாங் ஜெயா ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் 40-ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் வாக்குவாதத்தால் சலசலப்புக்குள்ளானதைத் தொடர்ந்து, ஆண்டுக்கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆலய நிர்வாகக் குழுவினருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே சில விவகாரங்கள் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாத நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான வாக்குவாதம் நீடித்தது.

இதனால், ஆண்டுக்கூட்டத்தை வழிநடத்துவதற்காக வந்திருந்த தேர்தல் அதிகாரியான மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் மாநிலப் பேரவை துணைத் தலைவர் சரஸ்வதி வேலு, நிலைமையைச் சமாளிக்க முயன்றார். எனினும், இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாததால், வேறுவழியின்றி ஆண்டுக்கூட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரஸ்வதி வேலு, ஆண்டுக்கூட்டத்தை மீண்டும் நடத்துவதற்கான புதிய தேதியை ஆலய நிர்வாகத்தினர் முடிவு செய்வர் என்று தெரிவித்தார்.

ஆண்டுக்கூட்டம் ஒத்திவைப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய தேதியில் ஆண்டுக்கூட்டத்தை மீண்டும் நடத்துவதற்கான வழி திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலைந்து சென்றனர். சலசலப்புடன் தொடங்கிய ஆண்டுக்கூட்டம், மீண்டும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் நிறைவுக்கு வந்தது.

Related News

ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலய ஆண்டுக்கூட்டத்தில் சலசலப்பு | Thisaigal News