Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா
ஆன்மிகம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா

Share:

சிரம்பான், ஜூலை.04-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜாஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, வரும் ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இதனையொட்டி ஜுலை 5 ஆம் தேதி சனிக்கிழமை கற்பூரத் திருவிழா மற்றும் ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவத் திருவிழாவுடன் பஞ்சமூர்த்திகள் இரத புறப்பாடு நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவையொட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை தேவஸ்தானத்தில் நடேஸ்வரர் உற்சவம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

காலையில் நடராஜா பெருமானுக்கும், ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் பெருமானுக்கும் விஷேச அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலையில் வசந்த மண்டப பூஜைக்கு பின்னர் சுவாமிகள் உள் வீதி மற்றும் வெளி வீதி வலம் வந்தனர்.

மலேசியாவில் முதல் முறையாக 63 நாயன்மார்கள் மற்றும் நடராஜ பெருமான் – சிவகாமி அம்மையார் இரதத்தில் வெளி வீதி வலம் பக்தர்களுக்கு அருள் காட்சி தந்தனர். உடன் பக்தர்களும் பன்னிசை திருமுறை பாராயணம் நடைபெற்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் பக்திப் பரவசத்துடன் சென்றது உற்சவத்திற்கு முத்தாய்ப்பாக அமைந்தது.


தேவஸ்தானத்தின் மஹோற்சவப் பூஜைகள் அனைத்தும் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ சுந்தரப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் தலைமையில் அவரின் ஆலோசனைப்படி நடைபெற்று வருகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த மஹோற்சவப் பெருவிழாவில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் அருளாசியைப் பெறுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு