Jan 17, 2026
Thisaigal NewsYouTube
மாசாயில் ஆஷாட நவராத்திரி திருவிழா
ஆன்மிகம்

மாசாயில் ஆஷாட நவராத்திரி திருவிழா

Share:

ஜோகூர், ஜூலை 15-

ஜோகூர், மசாய், ஜாலான் மசாய் லாமா-வில் வீற்றிருக்கும் சிவ கோட்டை ஸ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஸ்ரீ மகா சாமுண்டீஸ்வரர் அம்மன் கோவிலின் 10 ஆடி உயரம் கொண்ட முதல் சுதைவடிவமான ஸ்ரீ வாராஹி தேவி ஆஷாட நவராத்திரி திருவிழா, கடந்த ஜுலை 15 ஆம் தேதி திங்கட்கிழமை மிக கோலாகலமாக நடைபெற்றது.

அடியார்களின் குறைகளைத் தீர்க்கும் ஜெகன் நாயகியாம் அன்னை ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற வருடாந்திர ஆஷாட நவராத்திரி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்பிகையின் திருவருளைப் பெற்றனர்.

பக்தி பரவசமிக்க கரகாட்டத்துடன் மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த வருடாந்திர திருவிழாவில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் ஏந்தி, ஊர்வலமாக வந்து, பின்னர் அன்னை ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர்.

சக்தி வாய்ந்த தேவதையாக போற்றப்படும் அன்னை ஸ்ரீ வராஹி தேவி ஆஷாட நவராத்திரி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை அளித்தவர்களுக்கும், உபயம் எடுத்தவர்களுக்கு ஆலயத்தின் குருக்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்ளப்பட்டது.

வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஆலயத்தில் சிவசங்கர, சிவசங்கரி அஷ்ட மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனையொட்டி ஒவ்வொரு ஆடி வெள்ளியும் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ந டைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துக்கொண்டனர்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு