Jun 5, 2026
Thisaigal NewsYouTube
மாசாயில் ஆஷாட நவராத்திரி திருவிழா
ஆன்மிகம்

மாசாயில் ஆஷாட நவராத்திரி திருவிழா

Share:

ஜோகூர், ஜூலை 15-

ஜோகூர், மசாய், ஜாலான் மசாய் லாமா-வில் வீற்றிருக்கும் சிவ கோட்டை ஸ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஸ்ரீ மகா சாமுண்டீஸ்வரர் அம்மன் கோவிலின் 10 ஆடி உயரம் கொண்ட முதல் சுதைவடிவமான ஸ்ரீ வாராஹி தேவி ஆஷாட நவராத்திரி திருவிழா, கடந்த ஜுலை 15 ஆம் தேதி திங்கட்கிழமை மிக கோலாகலமாக நடைபெற்றது.

அடியார்களின் குறைகளைத் தீர்க்கும் ஜெகன் நாயகியாம் அன்னை ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற வருடாந்திர ஆஷாட நவராத்திரி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்பிகையின் திருவருளைப் பெற்றனர்.

பக்தி பரவசமிக்க கரகாட்டத்துடன் மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த வருடாந்திர திருவிழாவில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் ஏந்தி, ஊர்வலமாக வந்து, பின்னர் அன்னை ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர்.

சக்தி வாய்ந்த தேவதையாக போற்றப்படும் அன்னை ஸ்ரீ வராஹி தேவி ஆஷாட நவராத்திரி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை அளித்தவர்களுக்கும், உபயம் எடுத்தவர்களுக்கு ஆலயத்தின் குருக்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்ளப்பட்டது.

வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஆலயத்தில் சிவசங்கர, சிவசங்கரி அஷ்ட மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனையொட்டி ஒவ்வொரு ஆடி வெள்ளியும் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ந டைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துக்கொண்டனர்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி