Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா
ஆன்மிகம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா

Share:

சிரம்பான், ஜூலை.05-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, நாளை ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

காலை 6.01 மணிக்கு ஆலய நித்திய பூஜையைத் தொடர்ந்து அம்மை அப்பர் கலச வழிபாடு, சிவவேள்ளி பேரொளி தரிசனம், அம்மை அப்பர் தீர்ததாவாரி, தீபாராதனை நடைபெறும்.

காலை 8.01 மணிக்கு பால்குட ஊர்வலம் நடைபெறும். காலை 11.01 மணிக்கு உச்சி கால சிறப்பு பூஜை, மகேஸ்வர பூஜை நடைபெறும். மதியம் 12.31 மணிக்கு அன்னதானம் மற்றும் பக்த பெருமக்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கப்படும்.

மாலை 6.31 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பஞ்சமூர்த்திகள் இரத ஊர்வலம் இடம் பெறும்.

தேவஸ்தானத்தின் இந்த வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவில், அன்பர்கள், அடியார்கள் திரளாகக் கலந்து கொண்டு, பால்குட நிகழ்விலும் பங்கேற்க வேண்டும் என்று உற்வச விழாவிற்கு தலைமையேற்கவிருக்கும் திருக்கயிலாய பரம்பரை ஶ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஶ்ரீ கார்யம் வாமதேவ ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவண்ணாமலைக்கு நிகராக பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய நிலையில் மிகச் சக்தி வாய்ந்த பல அற்புதங்களைக் கொண்டுள்ள சித்தர்கள் வழிபட்ட ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு அருளாசியைப் பெற வேண்டும் என்று தேவஸ்தானம் சார்பில் சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு