Dec 1, 2025
Thisaigal NewsYouTube
நவராத்திரி விழா: காடிக்காரர்கள் அம்பு போடும் உபயம்
ஆன்மிகம்

நவராத்திரி விழா: காடிக்காரர்கள் அம்பு போடும் உபயம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் நவராத்திரி விழாவையொட்டி பத்தாம் நாள் விஜயசதமி விழா, நேற்று அக்டோபர் முதல் தேதி புதன்கிழமை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காடிக்காரர்கள் அம்பு போடும் உபயத்தையொட்டி உபய நாட்டாண்மை சி.தர்மலிங்கம், உபயப் பிரதிநிதிகள் எம். பூபாலன், எம். விக்னேசன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேவஸ்தானத்தின் பிரதான குருக்களான சிவகுமார் பட்டர் தலைமையில் அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. நடன நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன. விழாவின் உச்சமாக சிறப்புப் பூஜைக்குப் பின்னர் சுவாமி உள்வீதி ஊர்வலம் வந்து அம்பு போடும் நிகழ்வு நடைபெற்றது. சிவகுமார் பட்டர், இந்நிகழ்வை முன்னின்று நடத்தினார். தீபாரதனைக்குப் பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

Related News

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்

அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்