Jun 5, 2026
Thisaigal NewsYouTube
நவராத்திரி விழா: காடிக்காரர்கள் அம்பு போடும் உபயம்
ஆன்மிகம்

நவராத்திரி விழா: காடிக்காரர்கள் அம்பு போடும் உபயம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் நவராத்திரி விழாவையொட்டி பத்தாம் நாள் விஜயசதமி விழா, நேற்று அக்டோபர் முதல் தேதி புதன்கிழமை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காடிக்காரர்கள் அம்பு போடும் உபயத்தையொட்டி உபய நாட்டாண்மை சி.தர்மலிங்கம், உபயப் பிரதிநிதிகள் எம். பூபாலன், எம். விக்னேசன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேவஸ்தானத்தின் பிரதான குருக்களான சிவகுமார் பட்டர் தலைமையில் அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. நடன நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன. விழாவின் உச்சமாக சிறப்புப் பூஜைக்குப் பின்னர் சுவாமி உள்வீதி ஊர்வலம் வந்து அம்பு போடும் நிகழ்வு நடைபெற்றது. சிவகுமார் பட்டர், இந்நிகழ்வை முன்னின்று நடத்தினார். தீபாரதனைக்குப் பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி