Jun 5, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம்
ஆன்மிகம்

பத்துமலை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலைத் திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோயிலில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

வரும் ஆகஸ்ட் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முறையே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இந்த மகா சண்டி ஹோமம் நடைபெறவிருப்பதாக கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோயிலில் ஓராண்டு நிறைவையொட்டி பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய இந்த மகா சண்டி ஹோமம் நடத்தப்படவிருப்பதாக பத்துமலைத் திருத்தலத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான் ஶ்ரீ நடராஜா இதனைத் தெரிவித்தார்.

காணக் கிடைக்காத இச்சண்டி ஹோமத்தைக் காண பக்தப் பெருமக்களும், பொதுமக்களுக்கும் திரளாக வருகை தந்து ஹோம பூசைகளில் பங்கு பெற்று அன்னை ஸ்ரீ மகா துர்க்கை அம்மனின் அருளைப் பெற வேண்டுவதாக டான் ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சண்டி ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் யாகப் பொருட்களைத் தாங்களே யாக குண்டத்தில் இட்டு, பிரார்த்தனைச் செய்வதற்குரிய வசதியையும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாக டான் ஶ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி