சீனா ஓபன் பேட்மிட்டன் தொடரில் புதிதாக இணைக்கப்பட்ட மலேசிய கலப்பு இரட்டையர் ஜோடியான சென் டாங் ஜி மற்றும் கிளாரிசா டான் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்த புதிய ஜோடி ஜெர்மனியின் மார்வின் சைடல் மற்றும் துக் புவாங் நுவென் ஜோடியை எதிர்கொண்டது.
கடந்த வாரம் மட்டுமே இணைக்கப்பட்ட இந்த ஜோடி, ஆட்டத்தில் திறம்பட செயல்பட்டு 37 நிமிடங்களில் 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது. ஜப்பான் ஓபன் தொடரின் முதல் சுற்றில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்த ஜோடி இணைந்து பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்றில் சீனாவின் முன்னணி ஜோடியான ஜியாங் ஜென் பாங் மற்றும் சென் ஃபங் ஹுய் ஜோடியை எதிர்கொள்ளவுள்ளனர். இதற்கிடையில், மற்றொரு மலேசிய ஆடவர் இரட்டையர் ஜோடியான கோ ஸ்வே ஃபெய் மற்றும் நூர் இசுதீன் ஜோடியும் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.








