Aug 5, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவின் உலக பூ பந்து  சாம்பியன்ஷிப் பங்கேற்பில் மீது சந்தேகம்
விளையாட்டு

இந்தோனேசியாவின் உலக பூ பந்து சாம்பியன்ஷிப் பங்கேற்பில் மீது சந்தேகம்

Share:

இந்தோனேசியாவின் உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள கலப்பு இரட்டையர் ஜோடியான ஜஃபார் ஹிதாயத்துல்லா – பெலிஷா பசாரிபு, போட்டி முடிவை முறைகேடாக நிர்ணயித்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பாக கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்த வழக்குடன் அவர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், உலக பூ பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து அவர்கள் விலகியிருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தோனேசிய பூ பந்து விளையாட்டின் சங்கம், உலக பூ பந்து சம்மேளனம் பி.டபிள்யூ.எஃப் பல இந்தோனேசிய வீரர்கள் மீது நேர்மை விதிமுறை மீறல் குறித்த சுயாதீன விசாரணையை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து மேலதிக கருத்து தெரிவிக்க முடியாது என்றும், பி.டபிள்யூ.எஃப் -ன் சுயாதீன விசாரணைக் குழு இறுதி முடிவை வெளியிடும் வரை யாரும் ஊகங்களை பரப்ப வேண்டாம் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

இந்தோனேசியாவின் உலக பூ பந்து சாம்பியன்ஷிப் பங்கேற்பில் ம... | Thisaigal News