Aug 12, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலைக் கட்டிடக் கட்டுமான நிதி
தமிழ் பள்ளி

சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலைக் கட்டிடக் கட்டுமான நிதி

Share:

சிரம்பான், மே.23-

நாட்டில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான 125 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சிரம்பான், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளிக்குத் திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலைக் கட்டுமானத் திட்டத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட்டை சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் நன்கொடையாக வழங்கினார்.

பல தரப்பட்ட வசதிகளைக் கொண்ட ஒரு முன்னுதாரணப் பள்ளியாக விளங்கும் சிரம்பான், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் தற்போது 710 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலை வசதிகள் மேம்படுத்தப்படுமானால் ஆயிரம் மாணவர்கள் பயிலக்கூடியப் பள்ளியாக லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் தரத்தை உயர்த்த முடியும் என்றார் அந்தோணி லோக்.

பள்ளி பொறுப்பாளர்களிடம் நன்கொடைக்கான மாதிரி காசோலையை ஒப்படைக்கும் நிகழ்வில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு